|
1. அறத்துப்பால்
|
|
|
|
1.1 பாயிரவியல்
|
|
|
1.1.1 கடவுள் வாழ்த்து
|
|
1
|
அகர
முதல
எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. |
|
2
|
கற்றதனால் ஆய
பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். |
|
3
|
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். |
|
4
|
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. |
|
5
|
இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. |
|
6
|
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். |
|
7
|
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. |
|
8
|
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. |
|
9
|
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. |
|
10
|
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். |
Comments
Post a Comment